ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) Raja Nagarajan
-
- Kids & Family
-
Ainkaran, popularly known as Ganesha,
is a very popular God among all age groups.
This podcast uses Ainkaran as a
Narrator for telling Folklores and Fables
from all parts of the world .
These have been passed on from generation to
generation through word of mouth.
Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”
Email your comments to:
ainkaran2020@gmail.com
-
இரு நூறாவது கதை: தோல் பை (The Leather Bag)
இது ஒரு கொரியா நாட்டுக்கதை.
ஒரு கொரியா நாட்டு பணக்காரரின்
ஒரே மகன்- ஜின்.ஒவ்வொரு நாள்
இரவும்,அவன் அப்பாவின்
வேலைக்காரன் - கிம்-
ஒரு கதை சொல்வான்.
அந்த கதைகளை ஜின் யாரிடமும்
பகிர்ந்து கொள்ள மாட்டான்.
அவன் சுயநலம்,அவனுக்கு பெரிய
ஆபத்தை கொண்டு வந்தது.
கிம் அவனை காப்பாற்றுகிறான்.
ஜின்னுக்கு அப்படி என்ன ஆபத்து?
கிம் எப்படி அவனை காப்பாற்றினான்?
கதையை கேளுன்கள்....... -
நூற்றி தொண்ணூத்தி ஒன்பதாவது கதை:அலை (The Wave)
இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை.
ஜப்பான் தேசத்து கிராமம் ஒன்றில் ஒரு
கோவில் இருக்காம். அதில் வழிபடும்
தேவன், ஹோகே ஹாமா கூச்சி,என்ற
ஒரு வயதான புத்திசாலியான,கருணை
உள்ளம் படைத்த மனிதர். அவரை மரியாதயாக
ஓஜிசான் (Grandfather) தாத்தா என்று தான்
அழைப்பார்கள்.
கடவுளாக கும்பிட,அப்படி என்ந செயதார்?
கதையை கேளுங்கள்.... -
நூற்றி தொண்ணூத்தி எட்டாவது கதை:சுண்டெலி சூத்திரம் (The Mouse Sutrra)
இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை.
மந்திரங்கள் சொல்லி வழிபடுவது
எல்லா மதங்களிலும் உண்டு.
அர்த்தம் தெரிந்தோ தெரியாமாலோ
முழு நம்பிக்கையோடு சொன்னால்,
அதற்கு பலன் கிடைக்கும்'
என்று ஒரு நம்பிக்கை.
இந்த கதையில் ஒரு பாட்டி ,
ஒன்றும் தெரியாத ஒரு புத்த
சன்னியாசியிடமிருந்து அர்த்தமில்லாத
சூத்திரத்தை (மந்திரத்தை) கற்று கொண்டு
,நம்மிக்கையோடு ஜபிக்கிறாள்.'
அவளுக்கு பலன் கிடைத்ததா?
கதையை கேளுங்கள்.... -
நூற்றி தொண்ணூத்தி ஏழாவது கதை: ஒரு தங்க கட்டியும் 2 நண்பர்களும் (A Golden Nugget and Two Friends)
இது ஒரு சீன நாட்டுக் கதை.
டாமன்-பிதியாஸ் மாதிரி
சீன தேசத்தி ல்,2 நண்பர்கள்-
கீ வூ-பா ஷூ -இருந்தார்கள்.
அவர்கள்,இணைபிரியாமல்.
ஒரு போதும், சண்டை போடாமலும்
வாக்குவாதம் செய்யாமலும் இருந்தார்கள்.
அவர்கள்,வாழ்க்கையில் நடந்த
ஒரு சம்பவத்தை இப்போது
கேட்க போகிறீர்கள்.
கதையை கேளுங்கள்..... -
நூற்றி தொண்ணூத்தி ஆறாவது கதை:ட்ரவுசர் முகமதும் சுல்தானின் மகளும் ( (Trouser Mohamed and Sultan's Daughter))
இது ஒரு அரேபிய நாட்டுக் கதை.
முகமது ஒரு ஏழை.அழகானவன்.புத்திசாலி.
அவன் அப்பா,அவனுக்கு விட்டு போன சொத்து
ஒரு தொள தொள ட் ரொவுசர்.பேண்ட்-
அதை ஒரு சாக்காக மாற்றி போர்டர் வேலை
செய்கிறான்.
ஒரு நாள், சுல்தானின் மகளை
பார்க்கிறான்.அவளுக்கும் அவனை பிடித்திருந்தது.
சுல்தான் தன் மகளுக்கு மாப்பிள்ளை தேட
ஒரு புதிர் போட்டி நடத்துகிறார்.
முகமதும் அதில் கலந்து கொள்கிறான்
.அவன் வெற்றி பெற்றானா?
கதையை கேளுங்கள்.... -
நூற்றி தொண்ணூத்தி ஐந்தாவது கதை:சபாத் சிங்கம்(The Sabbath Lion)
இது அல்ஜீரியா நாட்டில் வசித்த
ஒரு யூத குடும்பத்தை பற்றிய கதை.
சபாத் தினம்(Sabbath day)
யூதர்களுக்கு ஒரு முக்கியமான நாள்.
அது ஒவ்வோரு வாரமும்,
வெள்ளி கிழமை மாலையிலிருந்து
சனி கிழமை மாலை வரை
கொண்டாடப்படுகிறது.
அன்று யூதர்க ஒய்வொடுத்து கொண்டு ,
கடவுள் பிரார்த்தனைகளில்
நேரத்தை செலவழிப்பார்கள்.
நம்பிக்கையோடு செயபவர்களுக்கு
கடவுள்
அருள் கிடைக்கும் என்று நம்பிக்கை.
அப்படி நம்பின,,ஒரு 10 வயது
பையனை பற்றிய கதை இது.
கதையை கேளுங்கள்....